Monthly Archives: July 2016

அண்டங் காக்கை

 

அண்டங் காக்கை

ENGLISH NAME சங்க கால பெயர் தற்போதைய பெயர் 
JUNGLE CROW வாய்வன் காக்கை அண்டங் காக்கை

 

 

JUNGLE CROW

CORRUS MACRORHYANACHOS

நமது ஊர் காக்கையிலிருந்து சற்று வேறுபட்டு காணப்படும். கழுத்து பகுதி நல்ல கருப்பு நிறமாக இருக்கும். வாய்ப்பகுதி (அலகு) சற்று பெரியதாக இருக்கும்.சங்க காலத்தில் பருந்துகள், கழுகுகள், கோட்டான்களோடு இணைந்து ஊர்ப்புறங்களுக்கு வெளியே இது திரிந்து கொண்டிருந்தது என்பதை

கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த

செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா

வாய்வன்  காக்கையுங் கூகையுங் கூடிப்

பேஏ யாயமொடு பெட்டாங்கு வழங்கும்

காடுமுன் னினனே….

என்ற புறநானுறு 238 இல் உள்ளது . இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது அண்டங் காக்கை என்பதனை அதன் அலகு பற்றிய ‘வாய்வன்’ என்ற அடைமொழி தெரிவிக்கின்றது. இறந்தவர்களுக்கு படைக்கப்படும் உணவை இதுவும் ஊர்க்காக்கைகளுடன் கூடி உண்பதையும் ஆங்காங்கே காணலாம், என்பதை பொருநராற்றுப் படை

செஞ்சோற்ற பலிமாந்திய

கருங்காக்கை கவவுமுனையின்

மனைநொச்சி நிழலாங்கண்

ஈற்றியாமைதன் பார்ப்போம்பவும்                            (183-186)

எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு காக்கைக்குச் சோறிடுபவர்கள் பலியிடப்பட்ட கோழி, ஆடு ஆகியவற்றின் இரத்ததையும் சோற்றுடன் கூட்டிப் படைக்கும் பழக்கம் இருப்பதாலேயே ‘செஞ்சோறு’ என்பதற்கு நச்சினார்க்கினியர் தன் உரையில் ‘உதிரத்தாற் சிவந்த சோற்றையுடையவாகிய பலியை விழுங்கின கருங்காக்கை ‘ என விளக்கம் தந்துள்ளார்.

Picture1 Picture2

பருத்த அலகு அதன் கருப்பு நிறத்ததான தோற்றத்துடன் இயைந்து இருப்பது புலவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதால் பல்வேறு அடைமொழிகள் தந்துள்ளனர். அவை

கருங்கட் காக்கை                         பதிற்றுப்பத்து 30

கொடுங்கண் காக்கை                  நற்றிணை 397

பசுங்கண் காக்கை                         நற்றிணை 258

வாய்வன் காக்கை                         புறம் 362

மணிவாய்க் காக்கை                    அகம் 319

மணிக்கட் காக்கை                        அகம் 327

 

கூகைகளுடன் நட்பும் பாராட்டி இணைந்து திரிவது என்பதைப்  புறநானுறு 392இன்

வாய்வன் காக்கை   கூகையொடு கூடிப்

பகலுங் கூவு மகலு  ளாங்கண்

என்ற வரிகள் மூலம் அறியலாம்.     

 

 

அத்தி(COUNTRY FIG)

 

English Name Tamil Name Botanical Name
COUNTRY FIG வெள்ளைஅத்தி FICUS RACEMOSAL

பொது விவரம்

அத்தி மரம் சமவெளியிலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.அத்தி நன்கு ஓங்கி உயர்ந்து வளரும் மரம். 12-20 மீட்டர் வரை உயர்ந்து வளரும் .அடிமரத்திலும் , கிளைகளிலும் , மரத்தை ஒட்டிகொத்துக்கொத்தாக  காய்கள் உருவாகும்.

1

பயிர் முறை

சற்று மழை அதிகமுள்ள இடங்கள், நீரோடைக் கரைகள், குளக்கரைகள், ஆற்றோரம் ஆகிய இடங்களில்  வளரக்கூடியது.

 

வேப்ப மரம்(NEEM TREE)

English Name Tamil Name Botanical Name
NEEM TREE வேப்ப மரம் AZADIRACHTA INDICA S. JUSS

அரபு மொழியில் அஸாடிராக்டா என்பது உன்னதமான மரம் [Noble Tree] என பொருள்படும். இன்டிகா என்பது இந்தியாவில் பெருமளவில் உள்ளது எனக் குறிப்பிடுகிறது. வடமொழியில் நோய் தீர்க்கும் மரம் – அரிஷ்டா – எனக் கூறுவர். பொதுவாக, வேம்பு ஒரு பசுமைமாறா மரம். கோடையில் இலையுதிர்ந்து கொண்டே, புதுத்தளிர்களை உருவாக்கிக் கொள்ளும். மார்ச் – ஏப்ரலில் பூத்துக் குலுங்கும்.

bird attractive trees

பயன்கள்:

தழை கால்நடைகளுக்குத் தீவனமாகும்.

பூக்கள்:

பூக்களில் தேன் திரவம் உள்ளது. மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தேனீக்களின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.

வேப்பெண்ணெய்:

பயிர் பாதுகாப்புப் பொருளாகவும், பயிர் பாதுகாப்பு இரசாயனங்களுக்கு எமல்சிபையராகவும் [emulsifier] எண்ணெய் உபயோகப்படுகிறது. பயிர் பாதுகாப்புச சக்தியுள்ள சத்துக்கள் வேப்பெண்ணெயிலும் உள்ளன.

வேப்பம் பிண்ணாக்கு

வேப்பம் பிண்ணாக்கை உரமிடலாம்.

வேப்பிலை

உலர்ந்த இலைகளை புகைக்கும் பொழுது, இப்புகை வீடுகளில் உள்ள கொசுக்கள் மற்றும் இதரப் பூச்சிகளுக்கு நச்சாகும். உலர்ந்த வேப்பிலையைப் பைகளில் போட்டு, பெட்டிகள், அலமாரிகள் ஆகியவற்றில் வைத்தால், அந்துக்கள், கரப்பான்கள் ஆகியவை வந்திடாது.

சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் திறன்

வேம்பு ஒருவித மகிழ்ச்சியைத் தரும் மரம். ஆண்டு முழுவதும் பசுமை மாறா மரமாக இயங்கி, நல்ல நிழல் கொடுக்கும்.

பயிர் முறை:

வேப்பமரம் எங்குமே வளரக் கூடியது. கடுமையான வெப்பத்தைத் தாங்குவதுடன் கூட, கடுமையாக வறட்சியையும் தாங்கிடும்.

முருங்கை மரம்(Drumstick tree)

English Name Tamil Name Botanical Name
Drumstick tree முருங்கை மரம் Moringa Oleifera Lamk

bird attractive trees

இந்தியா முழுவதிலும் வளரும் மரமாகும். எனினும் தென்னிந்தியாவில் அதிகமாக பயிரிட்டு வளர்க்கபடுகிறது. முருங்கை ஒரு சிறு மரம். 5-15 மீட்டர் உயரம் வளருகிறது. பிப்ரவரி மாதத்திற்குமேல் ரகத்தைப் பொறுத்து நீண்ட நாட்கள் பூக்கும். பூங்கொத்திக்களில், வெண்மை நிறப் பூக்களும் மொட்டுக்களும் அடர்ந்திருக்கும். பூக்கள் சிறிது நறுமணமுடையவை. இந்த பூக்களை நாடி பறவைகள் வரும். நீளமான காய்களுடைய ஜாப்னா [Jaffna] இரகம் பலராலும் மிகவும் விரும்பப்டும் இராகமாகும். இது கரிசல் பகுதியில் கூட வளரும். நீளமான காய்களுடைய மற்றொரு இரகம் சாவகசேரி. செம்முருங்கை ஆண்டு முழுவதும் காய்கும். ஆனால் சுமாரான நீளமுடையது. நெல்லை மாவட்ட பால்முருங்கை, அதிகச சதைபற்றுள்ளது. சுமாரான நீளமுடையது. கொடிக்காலில் வளரும், கொடிக்கால் முருங்கை 15 செ.மீ நீளமுடைய சிறு ரகம். முகவை மாவட்ட ஏர்வாடி ரகம் அதிக சதைப்பற்றுடன் 30 செ.மீ நீளமுடையது.
கரூர் பகுதியில் மானாவாரி சரளைப் பகுதியில் வளரும் இரகம் ருசிமிக்கது. ஆத்தூர் முருங்கை ருசிமிக்கது. கே.எம். 1 என்ற குடுமியான் மலையில் ஒரு சில மரங்கள் 4-5 அடி நிளமுள்ள முருங்கைக் கா ய்களைக் காய்க்கிறது.

பயன்கள்:

இலையில் நிறைய கால்சியமும், புரதமும் உள்ளது. அரிசி சோறு உண்பவர்களுக்கு, முருங்கைத் தழை ஏற்ற கீரையாகும். அரிசியில் இல்லாச் சத்துக்களை முருங்கைக் கீரை ஈடு செய்து விடும் மற்றும் நினைத்த சமயம் கீரையைப் பறித்து சமையல் செய்திடலாம். அதன் காரணமாகவே, “ஒரு முருங்கையும் ஒரு எருமையும் உண்டானால், வருகிற விருந்துக்கு மனம் களிக்க செய்வேன்.” என்ற பழமொழி கூறப்படுகிறது. கறவை மாடுகளில் இத்தழை நன்கு பாலூறப் செய்யும்.

மரம்:

வலுவ்வில்லாதது, காகிதக் குழம்பு தயாரிக்க உபயோகிக்கலாம். ஒரு சில இடங்களில், தீக்குச்சிகளும் தயாரிக்கின்றனர்.

இலை:

வைட்டமின் ‘சி’ பற்றாக் குறையால் ஏற்படும் ‘ஸ்கர்வி’ நோய்க்கு இலை சிறந்த மருந்தாகும்.

பயிர் முறை:

முருங்கை மரத்தை தமிழகத்தில் எங்கும் பயிரிடலாம்.